Saturday, October 8, 2011

தேன் ....தேன்...தேன்




தேன் என்பது :


 தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். 


இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். 


ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும்.


 கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு.


 ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு




தேனின் நிறம் :


 பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது.


தேனில் ஈரத்தன்மை :


தேனில் 14% - 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. 
ta.wikipedia.org/wiki/தேன்


தே‌னி‌ன் மக‌த்துவ‌ம் : மரு‌த்துவ‌ ஆ‌ய்‌வி‌ன் முடிவுக‌ள் :
Webdunia, 19 அக்டோபர் 2007. 2007-12-31 

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உ‌ள்ள வட‌கிழ‌க்கு வே‌ல்‌ஸ் அற‌க்க‌ட்டளை‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மரு‌த்துவ‌ர் ஃபாஷ‌ல் ராஃ‌ப் கா‌ன் தலைமை‌யிலான ஆ‌ய்வாள‌ர்க‌ள் தே‌னி‌ன் மக‌த்துவ‌ம் ப‌ற்‌றி ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர். 

கட‌ந்த 60 ஆ‌ண்டுகளாக உலகெ‌ங்கு‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட 18 மு‌க்‌கியமான ஆ‌ய்‌வி‌ன் முடிவுக‌ள் இ‌தி‌ல் ஆதாரமாக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. 

ஆ‌ய்‌வி‌ன் முடிவுக‌ள் கு‌றி‌த்து மரு‌த்துவ‌ர் கா‌ன் கூறுகை‌யி‌ல் ''நோயா‌ளிக‌ளி‌ன் காய‌ங்க‌ள் குணமடைவத‌ற்கு தேனை‌ப் பய‌ன்படு‌த்துமாறு அறுவை ‌சி‌கி‌ச்சை மரு‌த்துவ‌ர்க‌‌ள் ப‌ரி‌ந்துரை‌க்க வே‌ண்டு‌ம்” எ‌ன்று நா‌ங்க‌ள் ஆலோசனை கூறு‌கிறோ‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு தேனை‌ப் பய‌ன்படு‌த்த ‌‌நினை‌க்கு‌ம் நோயா‌ளிகளை ஊ‌க்கு‌வி‌க்க வே‌ண்டு‌ம். 

ஆனா‌ல, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் ஆலோசனைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்றுவத‌ற்கு தவ‌றி‌விட‌க் கூடாது. கு‌றி‌ப்பாக ‌‌வீடுக‌ளி‌‌ல் த‌ன்‌னி‌ச்சையாக காய‌ங்களு‌க்கு‌ தேனை‌க் கொ‌ண்டு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌க் கூடாது.

தே‌னி‌ல் எ‌ண்ண‌ற்ற மரு‌த்துவ‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் சே‌ர்ம‌ங்க‌ள் உ‌ள்ளன. அ‌திக ச‌ர்‌க்கரை, குளுகோ‌னி‌க் அ‌மில‌ம் ஆ‌கியவை காய‌ங்க‌ளி‌ல் பா‌‌க்டீ‌ரியா வள‌ர்‌ச்‌சியை‌த் தடு‌க்‌கி‌ன்றன.

மேலு‌ம, ‌தீ‌க்காய‌ங்களை‌ச் சு‌ற்‌றிலு‌ம் அ‌மில‌ச் சூ‌ழ்‌நிலையை உருவா‌க்‌கி நு‌ண்ணு‌யி‌ரிக‌‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சியை‌த் தடு‌ப்பதா‌ல் அவை ‌விரை‌வி‌ல் ஆ‌றி‌விடு‌ம்.

நீ‌ரி‌ழிவு நோயா‌ளிக‌ள் தேனை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல,ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

காயமடை‌ந்த தசைகளை ச‌ரிசெ‌ய்யவு‌ம் தே‌ன் உதவு‌கிறது. கு‌றி‌ப்பாக நு‌ண்துளை அறுவை ‌சி‌கி‌ச்சைக‌ளி‌ல் காய‌ங்க‌ள் ‌விரைவாக குணமடை‌ய தே‌ன் பய‌ன்படு‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை முடி‌ந்த ‌பிறகு காய‌ங்க‌ளி‌ன் மீது கு‌றி‌ப்‌பி‌ட்ட இடைவெ‌ளி‌க்கு ஒருமுறை தேனை‌‌க் க‌ண்டி‌ப்பாக‌த் தடவ வே‌ண்டு‌ம். 

ம‌ணி‌க்கு ஒருமுறை தேனை‌த் தட‌வினா‌ல் காய‌ங்க‌ள் ‌சு‌த்தமா‌கி‌‌விடு‌ம். 10 நா‌ட்க‌ளி‌ல் காய‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் அனை‌த்து‌ம் அ‌ழி‌ந்துவிடு‌ம். 

பு‌ற்றுநோ‌‌ய் அறுவை ‌சி‌கி‌‌ச்சை‌யி‌ன் போது ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காய‌ங்க‌ள் ஆறாது. அ‌ப்போது தே‌ன் ஒரு ந‌ல்ல மரு‌ந்தாக‌க் கை கொடு‌க்கு‌ம். 

உ‌ள்ளுறு‌ப்பு அறுவை ‌சி‌கி‌ச்சைக‌ளி‌ல் தே‌னை நேரடியாக‌ப் பய‌ன்படு‌த்த முடியாது. ஆனா‌ல் வேறு வடிவ‌ங்க‌ளி‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌‌ம'' எ‌ன்றா‌ர்



கண்பார்வை சிறக்க :


தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

நுரையீரல் சுவாச தொல்லைகளுக்கு :

 பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.


 தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

உடல் மெலிய :

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

 ஆஸ்துமா  , அலர்ஜி உபாதைக்கு :


தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி :


தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.


 இருதய நோய்கள் :


தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

சோகை நோய்க்கு:


உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

பழுக்காத கட்டிகள் , ஆறாத புண்கள் :


தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

 கீழ் வாதம் :

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி:

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

 பித்த நீர்த் தொந்தரவுகள் :

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

இரத்த விருத்தி :


அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர்:


அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

நீர்க்கோவை :

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.



ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்
.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சுத்தமான தேனா என்பதை அறிய...


தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு
Sign Up for The Honeyfeast Recipe Newsletter
Click the link below :
Subscribe now for Honey Feast news letters


 

Honey E-Cards

There's no better way to say you care than with a friendly card. We've made it even easier (and faster) with our brand new honey e-cards! From birthdays to spa days, our honey e-cards bring a sweet flavor to everyday messages by including fabulous honey recipes with every card. Try them out today and make someone smile!


Click here and send a HONEY  E -CARD :



No comments:

Post a Comment